திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே மருதப்பபுரம் சந்திப்பில் ராதாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர், சகாய ராபின் ஷாலு மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குமரி மாவட்டம் விளவன் கோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த லாரியில் அனுமதியில்லாமல் 30 டன் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, எம்.சாண்ட் மணலையும் லாரியையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்