திருநெல்வேலி: உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி (21.02.2025) அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப.,, முன்னிலையில், திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பாலசுப்பிரமணியம்(தலைமையிடம், மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர், சந்திரன் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர், சம்பத் , மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கீழ்க்கண்டவாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
“எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டு வர பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத் தாய்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன்” என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்