திருநெல்வேலி : தமிழக காவல்துறையில் 39 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி, சீதபற்பநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், ரங்கசாமி, தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர், ஐயப்பன், மற்றும் 15 வருடங்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெறும் அன்பு சேகர், ஆகிய மூன்று பேரும் சிறப்பான முறையில் பணியாற்றியதை பாராட்டி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., பொன்னாடை அணிவித்து, பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்