கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி, உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது குந்தாரப்பள்ளி மேம்பாலம் ஓசூர் செல்லும் சர்வீஸ் ரோட்டில், உத்தனப்பள்ளி To ஓசூர் ரோடு பீர்ஜேப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே ஆகிய இரண்டு இடங்களில் வந்த வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார்கள் எனவும் நிறுத்திய இரண்டு வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 4 யூனிட் மண், சுமார் 1 யூனிட் உடை கற்கள் இருந்தது அனுமதியின்றி மண், உடை கற்கள் கடத்திய இரண்டு வாகனத்தை பறிமுதல் செய்து குருபரப்பள்ளி, உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்