திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டு மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் இசக்கிமுத்து (22). பழைய பேட்டையை சேர்ந்த தங்ககுமார் (23). இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் மானூர் காவல் ஆய்வாளர், சந்திசேகரன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரையின் படி,மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (20.08.2025) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்