திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை மேலப்பாட்டம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி (45). தனியார் நிறுவன காவலாளியான இவரை, கே.டி.சி.நகர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த பிரேம் சங்கா் (25). கடந்த(21.8.2023)இல் பாட்டிலால் தாக்கியதாக முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து பிரேம் சங்கரை கைது செய்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் (11.03.2025) அன்று பிரேம் சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்