திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள பழவூரைச் சேர்ந்தவர் கயல்விழி (28). இவரை அக்டோபர் 2024இல் இருந்து காணவில்லை என உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், பழவூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் கயல்விழியை பிரதான பகுதியில் இருந்து ஒரு பெண் உள்பட 4 பேர் காரில் அழைத்துச் சென்று நகைக்காக 4 பேரும் சேர்ந்து அவரை கொலை செய்து களக்காடு- சேரன்மகாதேவி அருகேயுள்ள மணிமுத்தாறு பிரதான கால்வாயில் வீசியதும் தெரியவந்தது. துணை காவல் கண்காணிப்பாளர்கள், வெங்கடேசன் (வள்ளியூா்), சத்தியராஜ் (சேரன்மகாதேவி) ஆகியோர் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் கயல்விழியின் மண்டை ஓடு, எலும்புக்கூடு, ஆடைகள் உள்ளிட்டவை கால்வாயில் இருந்து மீட்கப்பட்டன. இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்