திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரி (32). இவருக்கும் களக்காடு அருகே தேவநல்லூரில் பன்றி வளர்ப்பு பண்ணையில் பணியாற்றி வரும் (17). வயது சிறுவனுக்கும் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, கடந்த 2 மாதங்களாக காளீஸ்வரி களக்காடு கோவில்பத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அந்த சிறுவனுடன் தங்கியுள்ளதை அறிந்த அச்சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில், நான்குனேரி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, காளீஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்