மதுரை: மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் சின்னத்தம்பி ரெட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த முகாமிற்கு, தலைவர் காந்தி தலைமை தாங்கினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் முன்னிலை வகித்தனர். காக்கும் கரங்கள் நற்பணி மன்ற செயலாளர் கண்ணன் வரவேற்றார். இந்த முகாமினை, அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் துவக்கி வைத்தார். இந்த முகாமில், கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் தேவி தலைமையில் செவிலியர்கள் ராஜேஷ்வரி, கீதா, ஜெய சினேகா, கற்பக ஜோதி, ஆகியோர் 120பேரு க்கு கண் பரிசோதனை செய்தனர். இதில், 58பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், ஒருங்கிணைப்பாளர் ஜெயகர் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி