திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர எல்கைக்குள் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 51.A ன் படி மாநகர எல்கைக்குள் நுழைய தடை விதிக்கும் அதிகாரத்தின்படி திருநெல்வேலி மாநகரம், பேட்டை, பாண்டியாபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் முத்துகுமார் (28.04.2025) தேதியில் இருந்தும், பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, இளங்கோ நகர், குட்டத்துறை, கீழத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் படுகையூர் பாஸ்கர் என்பவர் (29.04.2025) தேதியில் இருந்தும் ஆறு மாதங்களுக்கு நீதிமன்ற விசாரணை, காவல்துறை விசாரணை போன்ற காரணங்களைத் தவிர, மாநகரின் காவல் எல்கைக்குள் நுழைய திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்