மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட காவல் ஆளிநர்களுக்கு ரோந்து பணிக்காக மயிலாடுதுறை, செம்பனார் கோவில், பெரம்பூர், பாகசாலை, குத்தாலம், சீர்காழி, பூம்புகார், வைத்தீஸ்வரன்கோவில், A.K.சத்திரம், பொறையார் மற்றும் புதுப்பட்டினம் ஆகிய காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு உள்ளனவா மயிலாடுதுறை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி K. மீனா இன்று (18.6.24)ம் தேதி ஆய்வு மேற்கொண்டார். மேலும் ரோந்து வாகனத்தினை பயன்படுத்தும் காவலர் ரோந்து பணிக்கு முறையாக வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், குற்றம் நடவாமல் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.