திண்டுக்கல் : மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையம் வந்தபோது இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்ட போது முன்பதிவுல்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் 5.1/2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த இரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் இரயிலில் கஞ்சா கடத்தி வந்தது யார்? எங்கிருந்து எங்கு கொண்டு செல்கின்றனர் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா