கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் (15.04.2023) ஆம் தேதி நடந்த கொலை வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அவர்கள் (14.11.2025) ஆம் தேதி குற்றவாளிக்கு கொலை செய்த குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனையும் + ₹8,000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார், போலீசார் குற்றவாளியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினர்.
















