திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சிங்கம்பாறை, பொன் விழா நகரை சேர்ந்த அஜய் அன்பரசு (27). என்பவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ மற்றும் சர்ச்சைக்குரிய வசனங்களை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இது குறித்து முக்கூடல் காவல்துறையினருக்கு தெரிய வந்ததையடுத்து காவல் உதவி ஆய்வாளர், அக்னல் விஜய் வழக்கு பதிவு செய்து வீடியோவை வெளியிட்ட அஜ்ய அன்பரசை (22.05.2025) அன்று கைது செய்தார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்