திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (26.11.2025) அன்று காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில், இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில்: “இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும் சமநலச் சமுதாயமும், சமயச் சாரப்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும் அதன் குடிமக்கள் அனைவரும். சமுதாய பொருளியல், அரசியல் நீதி எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு, இவற்றில் தன்னூரிமை,சமுதாய படிநிலை, வாய்ப்பு நலம் இவற்றில் சமன்மை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும் தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும், உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும், உள்ளார்ந்த உறுதியுடையராய் நம்முடைய அரசமைப்புப் பேரவையில்,1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் என்று உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர், மரு.V.பிரசண்ணகுமார் இ.கா.ப, (மேற்கு), அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















