திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் 90 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 510 கிலோ கஞ்சாவினை நீதிமன்ற உத்தரவின்படி அழிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, ஆவடி காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி. K. பவானீஸ்வரி இ.கா.ப அவர்களின் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைத்துள்ள G.J.Multiclave India Pvt ltd., நிறுவனத்தில் உள்ள Insulator – ல் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடய அறிவியல் அதிகாரிகள் முன்னிலையில் எரித்து அழிக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகத்தில் 2025 ம் ஆண்டில் இதுவரை 581 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு கோடியே தொண்ணூறு லட்சம் மதிப்புள்ள 2,892 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















