திருநெல்வேலி : திருநெல்வேலி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், (12.06.2025) அன்று இரு இளைஞர்கள் காரின் மேற்கூறையில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் இணையத்தில் பரவியதால், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டறிந்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவிட்டார். அதன்படி, நாங்குநேரி காவல் ஆய்வாளர், சுரேஷ்குமார் தலைமையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு (வயது 30). மற்றும் இசக்கி ராஜா (வயது 26). ஆகிய இருவரும், என தெரிய வந்ததால் அவர்களை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.
இது போன்று சாலைகளில் சாகச முயற்சிகளில் ஈடுபடுவது, அவர்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்க வேண்டுமெனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்