திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் ஆடுகள் திருடு போனது தொடர்பாக எரியோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா உத்தரவின் பேரில் எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக குளத்தூர் ராஜக்கபட்டியை சேர்ந்த சூர்யா(25). மாரம்பாடி, பெரியகுளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன்(35). ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா