திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் சித்ரா. ஆசிரியை இவர், அங்குள்ள தேவாலயத்தில் (22.06.2025) அன்று மதியம் நடைபெற்ற அசன விருந்தில் பங்கேற்று விட்டு, நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், சித்ரா அணிந்திருந்த 11 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். இது குறித்து புகாரின் பேரில், திசையன்விளை காவல்துறையினர் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபரைத் தேடிவருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்