தூத்துக்குடி: தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8ம் அணியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் பணியிலிருக்கும் போது மரணமடைந்தார். அவரது மகள் ராதா என்பவருக்கு என்பவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழ்நாடு அரசிற்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி மேற்படி திருமதி. ராதா என்பவருக்கு வரவேற்பாளர் (Recepionist) பதவிக்கு தமிழ்நாடு அரசு பணி நியமனம் செய்துள்ளது. மேற்படி பணி நியமன ஆணையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் ராதா அவருக்கு வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி