திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, திருவண்ணாமலை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) திரு.A. அண்ணாதுரை அவர்களின் வழிகாட்டுதலின்படி, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.R.கவிதா அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
















