திண்டுக்கல் : திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துராஜா (31), என்பவரை போக்சோ வழக்கில் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மாவட்ட S.P.பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி பட்டிவீரன்பட்டி போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள், முத்துராஜாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.