கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது பேருஅள்ளி ஜெய்னுர் பிரிவு ரோடு அருகே அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 1 யூனிட் மண் இருந்தது. மண் கடத்திய நபரை கைது செய்து, வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவல் உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.