கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை சோதனை செய்ததில் அனுமதியின்றி 1 .1/2 யூனிட் ஜல்லி கற்கள் இருந்தது. ஜல்லி கற்கள் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
















