கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகதேவி கிராமத்தில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை செய்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்திய சோதனை செய்ததில் வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை சோதனை செய்ததில் அனுமதியின்றி கடத்தப்பட்ட சுமார் 4 யூனிட் ஜல்லி கற்கள் இருந்தது. ஜல்லி கற்கள் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து பர்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.