கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது உத்தனப்பள்ளி To கெலமங்கலம்ரோடு ஓடேப்பாளையம் பிரிவு ரோடு அருகே வந்த இரண்டு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி கற்கள் கடத்தியது தெரியவந்தது. அனுமதி இன்றி கற்கள் கடத்திய இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.