திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளியான அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் பொன்சுந்தர் 26. என்பவர் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால்
குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் திருமதி.ராஜகுமாரி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 20.01.2022 இன்று குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.