திண்டுக்கல் : திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (17). வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த திண்டுக்கல் நகர் அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரம் பகுதிச் சேர்ந்த தனுஷ்குமார்(20). என்பவரை போக்சோ வழக்கில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அமுதா அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர். அபிராமி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் மாதவன் அவர்களின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள், குற்றவாளி தனுஷ் குமாருக்கு 11 ஆண்டுகள் 06 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.2,500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















