மதுரை : மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் மில் தொழிலாளி திரவியம்
இவர், தனது நிறுவனத்தின் குப்பைக் கழிவுகளை ஏற்றி கொண்டு சமயநல்லூர் அருகே தேனூர் பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்ட் பகுதிகளில் கொட்ட வந்த போது, அங்கிருந்த மின்விளக்கு இல்லாத மின்கம்பத்தில் தவறுதலாக கை வைத்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்து
வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
![](https://policenewsplus.in/wp-content/uploads/2021/06/ravi-205x300.jpg)
திரு.ரவி