திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வடக்கு விஜயநாராயணம், நாச்சியார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இந்துமதி என்ற பெண்ணிடம் (22.05.2025) அன்று, வடமாநிலத்தைத் சேர்ந்த இருவர் நகைகளை புதுப்பித்து தருவதாகக் கூறி 12 கிராம் எடையுள்ள தங்கச் செயினை மோசடி செய்துள்ளனர். இது குறித்து இந்துமதி விஜயநாராயணம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், விஜயநாராயணம் காவல் ஆய்வாளர், பிரேமா விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சிறார்கள் உட்பட நான்கு பேரை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்ய உத்தரவிட்ட நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பிரசன்னா குமார்., இ.கா.ப., விஜயநாராயணம் காவல் ஆய்வாளர், மற்றும் காவலர்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப, வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்