தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் காவல்துறையினர் நேரில் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அன்னலட்சுமி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. ஜோஸ்லின் அருள்செல்வி ஆகியோர் இணைந்து குற்றாலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் ஆன்லைன் விளையாட்டின் மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் புகார் அளிக்கும் தொடர்பு எண்கள் (1098, 181, 14417, 1930) குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்…