திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த அக்ரஹாரப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மனைவி தெய்வாத்தாள் 63. இவர்கள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி திடீரென தெய்வாத்தாள் கழுத்தில் இருந்த 3¾ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மங்கலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் 25 என்பதும், தெய்வாத்தாளிடம் 3¾ பவுன்நகை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவரை பேலீசார் கைது செய்து 3¾ பவுன்நகை மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.