நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொளக்காட்டுப்புதூரில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வரதராஜன் 36. முரளி 34. சத்தியராஜ் 34 கோபி 40 லோகேஸ்வரன் 26 விஜய் 30 ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மொபட்டுகள் மற்றும் ரூ.500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.