திருப்பத்தூர் : அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன், பரமேஸ்வரி மற்றும் போலீசார் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில்டுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் திருத்தணியை சேர்ந்த சாரதா (46) மற்றும் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த யசோதா (55), என்பதும் இவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து தலா 25 கிலோ கொண்ட 10 மூட்டைகளை சுமார் 250 கிலோ மதிப்பிலான ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து இரவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் குமாரிடம், ஒப்படைத்தனர்.