மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக சைபர் குற்றங்களை தடுக்க பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக சமூக வலைதள பிரிவு (Social Media Cell) இயங்கி வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் (Facebook Page) ஆட்சேபனைக்குரிய வகையில் தொடர்ந்து பதிவுகள் செய்துவந்த திண்டுக்கல் மாவட்டம், ராமராஜபுரம், மட்டப்பாறையைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் விஜயகுமார்,47 இருப்பு: வடக்கேதில் இல்லம், தென்கரை, மன்னார்காடு தாலுகா, பாலக்காடு மாவட்டம், கேரளா என்பவர் மீது மதுரை மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கு தொடர்பாக முறைப்படி 41 (A) கு.வி.மு.ச அழைப்பாணை சார்பு செய்து விசாரணைக்குப்பின் இன்று 13.05.23-ம் தேதி மேற்படி நபர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், இது போன்று சமூக வலைதளங்கள் மூலமாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் தவறான கருத்துக்களை பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்