மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் அருகே வள்ளியூர் காவல் ஆய்வாளர், நவீன் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஏர்வாடி, LNS புரம், நடுத் தெருவை சேர்ந்த முகேஷ் (29) என்பவர் ஓட்டி வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக M.SAND மணலை ஏற்றிவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து முகேஷை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 2 யூனிட் M.SAND மணலையும், ஒரு மினி டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலியல் வழக்கு சாட்சிக்கு கொலை மிரட்டல்
திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் சேர்வலாறை சேர்ந்த மாடசாமி (31) என்பவர் மீது பாலியல் வழக்கு ஒன்று நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இவ்வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்து வரும் அசோக்குமார் (47) என்பவரை சாட்சி சொல்ல கூடாது எனக் கூறி மாடசாமி அவரிடம் தகராறில் ஈடுபட்டு கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அசோக்குமார் வி.கே.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர், சமுத்திர ராஜன் வழக்கு பதிவு செய்து மாடசாமியை 02.06.2025 அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
காற்றாலையில் திருட்டு. மூவர் கைது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தெற்கு வாகைகுளத்திலுள்ள காற்றாலை கம்பெனி சூப்பர்வைசராக கருப்பசாமி (45) பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் காற்றாலைக்கு சொந்தமான 15 இரும்பு பிளேட்டுகள் திருடு போயிருப்பதை அறிந்த கருப்பசாமி மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் உதவி ஆய்வாளர், சஜீவ் விசாரணை மேற்கொண்டதில்தென்காசி மாவட்டம் ஊத்துமலை, கல்லத்திகுளம், வடக்கு தெருவை சேர்ந்த மோசை (43), முத்துக்கனி (38), களக்குடியை சேர்ந்த முருகன் (54) ஆகிய மூவரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .
போதை பொருள் விற்பனையில் மூன்று வாலிபர்கள் கைது.
திருநெல்வேலி: கங்கைகொண்டான் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அபினேஷ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கே.எல்.ஆர் மாவு மில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஆலங்குளம், அருணாச்சலபுரம்,தெற்குத் தெருவை சேர்ந்த முருகேசன் (28), ராஜாஜி (25), ரமேஷ் (24) ஆகிய மூவரையும் சோதனை செய்ததில் 1 கிலோ 50 கிராம் எடை கொண்ட போதை சாக்லேட் மற்றும் 6 மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தாழையூத்து காவல் ஆய்வாளர், சபாபதி (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து மூவரையும் 02.06.2025 அன்று கைது செய்து அவர்களிடமிருந்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்