கோவை : போத்தனூர் காவல் நிலைய சரகம் ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு காவல் துறையால் நடத்தப்படும் காவல்துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்க உள்ளது.
இந்த முகாமில் கோவை மாநகரம் 173, கோவை மாவட்டம் 74, திருப்பூர் மாநகர் மாவட்டம் நாமக்கல் 86,
ஈரோடு 66, நீலகிரி 79, சேலம் மாநகர் 187, சேலம் மாவட்டம் 175, தர்மபுரி 798, கிருஷ்ணகிரி 167,
தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4 மற்றும் 7 அணி பிஆர்எஸ் மற்றும் மண்டல அலுவலகங்கள் 69 மொத்தம் 1374 நபர்கள் பதிவு செய்து உள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாமில் 75 நிறுவனங்கள் (கூடுதலாக 8 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது) பங்கு கொள்கின்றனர். மாணவ மாணவியர்கள் பதிவு செய்ய 11 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு முகாம் கோவை மாநகர் மற்றும் மண்டல காவல்துறை சார்பில் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாமை கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு பிரதீப் குமார் ஐபிஎஸ் மற்றும் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு ஆர் சுதாகர் அவர்களும் துவக்கி வைக்க உள்ளனர்.
ஒருங்கிணைப்பாளர்களாக திரு. டி. ஜெயச்சந்திரன் ஐபிஎஸ் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு வடக்கு மற்றும் திரு.எஸ் செல்வ ரத்தினம் ஐபிஎஸ் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் உள்ளனர்.
மேற்பார்வை நோடல் அலுவலர்களாக செய்வேக் CII ஞானசேகரன் மண்டல இணை இயக்குனர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை. திருமதி சுகாசினி காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் CWC கோவை மாவட்டம் அவர்களும் உள்ளனர்.
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)