நாகப்பட்டினம் : தற்பொழுது ஆன்லைன், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக பல்வேறு வகையான போலியான விளம்பரங்கள்,பரிசு பொருட்கள் தருவது தொடர்பாக மற்றும் வங்கிகள் என இது போன்ற முறைகளில் பொது மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு பெரிய கூட்டமே செயல்பட்டு வருகின்றன என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தெரிவித்துள்ளார்
இது போன்ற நூதன கொள்ளை கும்பல் விரிக்கும் வலைகளில் சிக்காமல் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மேலும் உங்கள் தொலைபேசி வாயிலாக மின்னஞ்சல் மற்றும் செய்தி மூலமாக போலியான விளம்பரங்கள் அனுப்புகிறார்கள்.
இதனை நாம் உள்ளே சென்று பார்த்தால் நம் தரவுகளை நம்மிடமிருந்து அனைத்து தகவல்களையும் மற்றும் வங்கி தொடர்பான தகவல்களையும் தெரிந்து கொள்வார்கள். ஆகையால் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி தொடர்பான தகவல்களை பாதுகாக்க இதுபோன்ற போலியான விளம்பரங்களை நம்பாதீர்கள் என நாகப்பட்டினம் மாவட்ட பொது மக்களுக்கு, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் அறிவுறுத்தியள்ளர்கள்.