மதுரை : மதுரை மாவட்டம் . சமயநல்லூர் ஊர்மெச்சிகுளம், நாடார் சமுதாய கூடம் அருகே, வீரபத்திரன் (54) என்பவர் இரவு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றவர். காலையில் வந்து பார்த்த பொழுது வாகனத்தை, காணவில்லை என சமயநல்லூர் போலீசாரிடம் புகார் மனு கொடுத்திருந்தார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து, தேனூரைச் சேர்ந்த அருண்குமார் (20) என்பவரை கைது செய்து, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை