சென்னை: சென்னை பெருநகரில்”போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, S-9 பழவந்தாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில், காவல் குழுவினர் 16.09.2021 அன்று காலை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை அருகே கண்காணித்தபோது,
அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1) அருண்பாண்டியன், 24, 2) கார்த்திக், 21, 3) தமிழ்செல்வன் (எ) குள்ளா, 24, 4) விஜய், 23, 5) ராகேஷ், 21, ஆகிய 5 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் பணம் ரூ.600/- கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
