கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து வாழ்ந்து வந்த மகேஷ் 22. என்பவரை காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் அந்நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்குப்பதிவு செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
குழந்தை திருமணம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவித்திட 181,1098 மற்றும் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212, 7708100100 என்று எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் இரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்