கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன்.,இ.கா.ப, அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி, ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கீழ்குப்பம் காவல் நிலைய தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. மியாடிட் மனோ மற்றும் காவலர் திரு. ராமதாஸ் ஆகியோர் (18.11.2022)- ந் தேதி இரவு 01.30 மணியளவில் செம்பாக்குறிச்சி டோல்கேட் அருகே வாகன தணிக்கை செய்தபோது TN 39 AS 2979 பதிவெண் கொண்ட Ashok layland லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ராஜேந்திரன்(55), குமராட்சி, காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சட்டவிரோதமாக 13.5 டன் ரேஷன் அரிசியை கடத்தியதால் கைது செய்து, கடத்திய ரேஷன் அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்து விழுப்புரம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோத ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.