கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் நேற்று அங்குள்ள இடிகரை மணியக்காரன் பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 18 பெட்டிகளில் 540 கிலோ எடை கொண்ட குட்கா ,பான் மசாலா , மாணிக்சந்த் போன்ற புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் .இதன் மதிப்பு 12 ,50 லட்சம் இருக்கும் . இதை கடத்தி வந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டது . இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் அதிகாரி கங்காதரன் (வயது 42) கைது செய்யப்பட் டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்