திண்டுக்கல், வேடசந்தூரை சேர்ந்த டாக்டர் ஜோஸ்வாசாம்ராஜ்(29) இவர் காணவில்லை என்று வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வேடசந்தூர் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில்
இன்று கொடைக்கானல் பூம்பாறை அருகே நின்று கொண்டிருந்த காரில் துர்நாற்றம் வீசுவதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொடைக்கானல் காவல்துறையினர் காரின் கதவைத் திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசப்பட்டு பிணம் இருந்தது. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது
வேடசந்தூரை சேர்ந்த டாக்டர் ஜோஸ்வாசாம்ராஜ்(29) என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கொடைக்கானல் போலீசார் ஜோஸ்வாசாம்ராஜ் இறப்பு கொலையா? தற்கொலையா? வேறேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா