சென்னை: சென்னை காவல் துறையில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களையும், புதிய திட்டங்களையும் அமல்படுத்தி வருகின்றனர். அதே போல வளர்ந்த நாடுகளில் காவல் துறை பயன்படுத்தும் ரோந்து வாகனம் போன்று சென்னை போக்குவரத்து காவல்துறையில், பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளிலும் சுலபமாகச் சென்று ரோந்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் போக்குவரத்து காவல்துறையினருக்கு, ஸ்மார்ட் பைக் ரோந்து வாகனங்களை வழங்கப்பட உள்ளன. சென்னை போக்குவரத்து காவல்துறையினர், ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையில், இந்த ஸ்மார்ட் ரோந்து வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை உட்புறச்சாலை, பாண்டி பஜார் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் பயன்படுத்தும் வகையில், சைரன் ஒலி, வண்ண விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கியும் பொறுத்தப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு, கொண்டு வரப்பட்ட இந்த வாகனத்தை அதிகாரிகள் சோதனை ஓட்டம் செய்து பார்த்தனர். 6 மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் 40 கிலோ மீட்டர் வரை ஓட்டிச் செல்லும் வகையில் வாகனம் வடிவைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் விலை சுமார் ஒரு லட்ச ரூபாயாகும். முதற் கட்டமாக 10 ஸ்மார்ட் ரோந்து வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ரோந்து வாகனங்கள் விரைவில் சென்னையில் உலாவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி