திண்டுக்கல் வேடசந்தூர் அருகே நவாமரத்துப்பட்டியை சேர்ந்த கொத்தனார் தர்மராஜ்(56) இவர் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் அருகே சாலையூர் நால் ரோடு அருகே இடையகோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்மராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா