விழுப்புரம்: வெளிமாநில கொள்ளையர்களை பிடித்த தனி படை போலீசாரை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தீபக் சிவாஜ் IPS., அவர்கள் இன்று சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.திருமால் மற்றும் தனி பிரிவு ஆய்வாளர் திரு.தங்க குருநாதன் ஆகியோர் இருந்தனர். சான்றிதழ் மற்றும் வெகுமதி பெற்ற காவல் ஆளிநர்கள்: உதவி ஆய்வாளர்கள் திரு. ஆனந்த ராசன், திரு.பாண்டியன்
தலைமை காவலர்கள் திரு.மகாராஜா, திரு.சிவகுமார், முதல் நிலை காவலர் திரு.சக்திவேல் அனைவரும் மேற்கு காவல் நிலையம், தலைமை காவலர்கள் திரு.சையது ஹபீஸ் (வளவனூர் காவல் நிலையம்) மற்றும் திரு.இப்ராஹிம் விக்கிரவாண்டி காவல் நிலையம்.