திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த செம்பாசி பள்ளி குப்பம் என்ற மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். மீனவரான இவரது மகள் மமிதாஸ்ரீ. தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார்.
ஐந்து வயது முதல் கராத்தே பயிற்சி பெற்று வரும் இவர் இலங்கை,கொழும்புவில் நடைபெற்ற ஒன்பதாவது ஆண்டு ஆசிய அளவிலான கராத்தே போட்டியில் 61 எடை பிரிவில் பங்கேற்று இந்திய அணி சார்பில் விளையாடி இரண்டாம் இடம் பிடித்தார்.
அதன்படி வெள்ளி பதக்கத்தை பெற்று நாடு திரும்பிய மாணவியை பழவேற்காடு பகுதி மக்கள் அன்புடன் வரவேற்றனர்.
தகவல் அறிந்து பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் மாணவியை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு மாணவி மமிதாஸ்ரீ அளித்த பேட்டியில் தங்களது மீனவ பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி எனவும் இப்பகுதியில் இருந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க போதிய வசதி வாய்ப்புகள் இல்லை எனவும் இதற்கான வசதி வாய்ப்புகளை தமிழக அரசு செய்து கொடுத்தால் மேலும் பல வெற்றிகளை பெற முடியும் எனவும் தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்பதற்கு தற்போது தயாராகி வருவதாகவும் இதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் எனவும் மாணவி கோரிக்கை வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி துணை வட்டாட்சியர் பாரதி உடன் இருந்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு