தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி 65. நேற்று முன்தினம் இரவில் திருமலைச்சாமி தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திருமலைசாமி அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சொக்கம்பட்டி போலீசார், திருமலைச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.