சென்னை: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் 2.11.2021 அன்று இரவு பெரும்பாக்கம், எழில் நகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு பின்புறம் கண்காணித்த போது,
மேற்படி இடத்தில் சட்டவிரோதமாக, விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 1) தமிழ்ச்செல்வன் 40. பெரும்பாக்கம் 2) முத்துலட்சுமி 57. பெரும்பாக்கம் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்